Wednesday, June 5, 2013

அரவிந்தர்



விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.
* நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.
* நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான்.
* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டு விடாதே.
* உன்னைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் உள்ள தீமையைப் போக்கி நன்மையை நிச்சயம் அவன் அருள்வான்.
- அரவிந்தர்