Monday, December 13, 2010

சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள்

நேரிலோ, சினிமாவிலோ, பிற ஊடகங்களிலோ அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லாமலும் கூட சில நிஜ ஹீரோக்களை ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலேயே நமக்கு சட்டென்று பிடித்துப் போகின்றது.
தற்போதைய கோவை போலீஸ் கமிஷனர் டாக்டர். சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
இவரை ஒன்றிரண்டு முறை சில டிவி பேட்டிகளில்தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார். அவரது பேச்சில் வெளிப்படை, உண்மை, அழுத்தம், கம்பீரம், தயக்கமற்ற தன்மை, சுகமான கிராமீயத் தமிழ் என ஈர்க்கப் போதுமான அனைத்துமே இருக்கின்றன. சமீபத்திய கோவை என்கவுண்டரின் உற்சாகத் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வு நிச்சயமாக எழுதப்படவில்லை. அதைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் நமக்கு இருக்கலாம்.
சமீபத்திய ஒரு பேட்டியில் சினிமாக்களில் காட்டப்படும் ஸ்பெஷல் விளக்குகளுடன் கூடிய விசாரணை அறைகள் பற்றிக் கேட்டபோது, மெல்லிய புன்னகையுடன் 'அது அவர்களின் கற்பிதங்கள், தமிழகத்தில் இருக்கும் சுமார் 1000 காவல் நிலையங்களில் அதுபோல எங்குமே கிடையாது' என்றார். உங்களை எது இப்படியான சீருடைப்பணிக்குத் தூண்டியது என்ற கேள்விக்கு, மிடுக்கான உடையுடன் வந்து தன்னை ஈர்த்த, 'NCC' குழுவையும் பார்த்துக்கொண்ட தன் பள்ளியாசிரியர்தான் என்றார். அவர் இவரை அந்த உடையை அணிந்துவரச்செய்து 'சைலேந்திரபாபு' என்று கம்பீரமாக மொழிந்த அந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.
Msc., (அக்ரி) படித்து வங்கி அதிகாரியாக பணியைத் துவக்கிய சைலேந்திரபாபு பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வென்று அஸிஸ்டெண்ட் சூபரிண்டண்ட்டாக காவல் பணியைத் துவங்குகிறார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை சிட்டியின் துணை, மற்றும் இணை கமிஷனர் பதவிகளிலும் பணியாற்றி, திருச்சியில் டிஐஜியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது கோவையின் கமிஷனராக இருக்கிறார். இதற்கிடையே 'தமிழக சிறப்பு அதிரடிப்படை' ஐஜியாகவும் சில காலம் பணியாற்றி இருந்திருக்கிறார். குழந்தைகள் தொலைந்து போதலின் பின்னணி, அதற்கான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுப்பணியும் மேற்கொண்டுவருகிறார்.
கராத்தே, நீச்சல், துப்பாக்கிசுடுதல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.  உடலைப் பற்றி பேசும் போது, 'உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதக் கருவி. இதைக்கொண்டு எதையும் சாதிக்கலாம். நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே..' என்கிறார். இந்தச் செய்தியை, விழிப்புணர்வை குழந்தைகள், இளைஞர்களிடத்தே கொண்டுசெல்வதிலும் பெரும் ஆர்வமிருக்கிறது அவருக்கு. தமிழிலும், இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார். 'உடலினை உறுதி செய்', 'நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்' 'Be Ambitious' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தலைவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கள் காவல் பணியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பெருமையோடு இந்தக்குறளை எடுத்தாள்கிறார் தன் பேச்சில்..

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.   

கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம். ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே

Saturday, December 11, 2010

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில்

பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன்.
அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.

இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............

*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை.

நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில்
தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி.

குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................

* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய்.

அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை
தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்............................ ..

* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான
நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32
கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள்,
மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட
பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை,
திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய
பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

Thursday, December 9, 2010

Wednesday, December 8, 2010

கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.

முதலில் ஸ்கேன் என்பது என்ன?
ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன். இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.
ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.
ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?
முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன் அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
இல்லையென்றால், முதல் கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது இரத்தபோக்கு ஏற்பட்டால்
உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
பரவாயில்லை.
முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.
சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்.
DOWN’S SYNDROME என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.
அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?
20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.
கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
வாரங்களில்) செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.
இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?
பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?
ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.
ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன் என்பது நிச்சயமாக ஒரு உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.
மகப்பேரும் ...
பாகம் 2 : நீங்கள் கர்ப்பிணியா ? எங்கோ பிறந்து ! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்கி உருவாக்கி உறவு கொள்ளச்செய்கிறார்கள் பெற்றோர்.வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ் நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்” என்ற உறவால் இணைகிறார்கள். அவர்கள் தாய், தந்தையரை மறந்து, உற்றார், உறவுகளை மறந்து. ஏன்? உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீஎன்ற நிலையில் தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும். காலகட்டத்தில் ஆணின் விந்துகள், பெண்ணின் கருப்பையில்போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள். சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தொ¢ந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி…தள்ளி ஆகும். சிலரால் உடனே தொ¢ந்து கொள்ள முடயாது. அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டா¢டம் சென்று தான் காப்பம் அடைந்து இருக்கிறோமா?இல்லையா? என்படை உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமகிவிடும். முன்னோ அல்லது பின்னோ தேதியை சொல்லி வைக்க. டாக்டரும் அந்த தேதியை வைத்து டானிக், குழந்தை வளர்ச்சி இவைகளைப் பார்க்க முன்னுக்கு பின் மாறி குழந்தை யின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாக்கும். “முதல்” பிஈசவம் என்றால்… வளைகாப்பு போன்ற விழாக்கள் முன்பே போனால் கணவரை பி¡¢ந்து இருக்கும் சூழ் நிலை உருவாகும். இந்த சூழ்நிலையில் குழதை பிறக்க கஷ்டமாக இருக்கும்.பின்னால் நாள் இருக்கிறது என நினைத்து வெளியூர், வெளியிடங்களுக்கு செல்லும் போது “குழந்தை” பேரூந்தில், ரயிலில் இப்படி பொது இடங்களில் பிரசவிக்க நேர்ந்து விடலாம்.இருள் சேரன் போக்குவரத்தில் பிறந்தவள், இவன் திருவள்ளுவர் போக்குவரத்தில்பிறந்தவன் என்று சொல்லி சி¡¢க்கும் படி ஆகிவிடும். எனவே, மாதவிடாய் நின்ர தேதியை காலண்டா¢ல் அல்லது ¨டா¢யில் கு¡¢த்து வைப்பது நல்லது. 2 கர்ப்ப காலத்தில் சில சமாச்சரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். இது குறித்து ப்வ்வொரு பெண்ணும், முழுமையாக,தெளிவாக தொ¢ந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு கணவனைக் கண்டாலே பிடக்காமல் போகும். அது மிகஸ் சிலரே.கர்ப்பமுற்ற மூன்று, நாங்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள்இருக்கும். அதனால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மயக்கமாக இருக்கிறது எழுந்தால் தலைசுற்றுகிறது. என படுத்தே கிடந்தால் சோம்பல் அதிகா¢க்கும்.எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வுபோய் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் வேலைகளை வழக்க மாகச்செய்யலாம். வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர்வு அதிகா¢க்கும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்புஉண்டாகும். எனவே, டாக்டா¢டம் காட்டி வாந்தி வராமல் இருக்க “டானிக்” வாங்கி சாப்பிட்டு. வாந்தி வருவதை குறைத்து சோர்வின்றி இருக்கலாம். கர்ப்பமுற்ற பெண் கணவனுடன் சந்தோஷமாக இருக்க தடையில்லை அவ்வாறு இருக்கும் போதுவயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “ஆவேசமாக இருக்க கூடாது” என்பது தான் முக்கியம். கர்ப்பமுற்ற பெண் உருண்டு புரண்டு படுக்கக் கூடாது. அவ்வாறு படுப்பதால் குழந்தையின் உடலில் “கொடி” சுற்றிக் கொள்ள ஏதுவாகும் . குழந்தையின் சுவாசப் பகுதியில் கொடி சுற்றினால் குழந்தை வயிற்றுக்குள் இறப்பதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.எனவே, கர்ப்பிணி பெண்கள் மிக மெதுவாக திரும்பிபடுக்க வேண்டும். அல்லது எழுந்து திரும்பி படுக்க வேண்டும். அவ்வாறு மென்மையாக திரும்பி படுப்பதால் குழந்தை ஆரோக்கியாமாக வளரும். கர்ப்பபை நல்ல முறையில் இருக்கும் பெண்கள் ப்த்து மாதம் வரை (குழந்தை பிறக்கும் வரை) வேலையும் செய்யலாம்.கணவனுடன் சந்தோஷமாகவும் இருக்கலாம்.அவ்வாறு இருப்பதால் கெண்ணின்”ஆசானப் பகுதி சுருங்கி வி¡¢வதால்” குழந்தை பிறக்க ஏது வாகும். மனதை பக்குவப் படுத்துவது 3 உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனம் மிகவும் சந்தோசமாக இருக்க வேன்டியது அவசியம். வீணாக கவலைப் பட்டுக் கொண்டு. எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது புலப்பிக் கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். எனவே, ”துன்பன்ங்களை கண்டு துவண்விடாமல்” ¨தா¢யமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டால் ¨தா¢மான குழந்தை பிறக்கும். இதில் ஐயம் இல்லை. பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதா¢ன், நாராயணனின் கதையை கேட்டதால். குழந்தை பிரகலாதன் நாராயண பக்தனானன். இதில் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது என்பது தொ¢கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளை கேட்டல். நல்ல புத்தகங்களை படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்இருக்கும் போதே கருவிலே தொ¢ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. நமது மன நிலையில் பிரதிபிம்பம் தான் குழந்தை. இந்த குழந்தையை நல்ல குழந்தையாக பெற்றெடுக்க பாடல்களை பாடலாம். அவ்வாறு பாடும் போது நமது மனம் எல்லா பிரச்சனைகளையும்மறந்து பாடலில் ‘லயித்து’ மனம் ‘லேசாகி’ விடும். சுவாசமும் நல்ல முறையில் இருக்கும் . இதற்கு பாடகியாக இருக்க வேன்டும் என்று அவசியம் இல்லை. தன்னால் என்ன பாட முடியுமோ அதை கூச்சமில்லாமல் பாடினால் போதும். 4 நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி விலங்குகள், பறவைகள் கூடிவாழ. காலம், நேரம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு என நாம் நினைக் கலாம். நல்ல நேரத்தில் கர்ப்பம் தா¢த்தால். நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும். என்ற காரணத்தால் பொ¢யவர்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள். ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. முதல், இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய். அப்போது குழந்தை சுக்லம், சுஇயோணிதம் ஒன்றாகி தடித்து மாமிசம் பெற்று திகழும். மூன்றாம் மாதத்தின் அதிபதி குரு. இம் மாதத்தில் கை, கால், சிரசு தோன்றும். நான் காம் மாத்தின் அதிபதி சூ¡¢யன். இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும். ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்தமாதத்தில் மாமிசபாகத்தை வலுவடையத்தக்க தோல் உண்டாகும். ஆறாம் மாதத்தின் அதிபதி சனி. இம்மாத்தில் தோல் மீது உரோமங்கள் வளரஆரம்பிக்கும். ஏழாம் மாதத்தின் அதிபதி புதன். இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானேந்தி¡¢யங்கள் உண்டாகும். எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடிவழியாக உண்டு திருப்தி அடையும். இம்மாதத்தின் அதிபதி குழந்தி கர்ப்பம் தா¢க்கும் போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்தகிரக அதிபதி. ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த கால கட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளியு;அகை நோக்கியிருக்கும். பத்தாவது மாதத்தின் அதிபதி சூ¡¢யன். இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்கு¡¢ய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும். 5 என்ன குழந்தை வேண்டும்? பெண் கருத்தி¡¢ப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பின்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்திக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்குள் அதிகா¢த்தி ஆண் குழந்தை பிறக்கும். இதே சமயத்தில் கால் சியம் மக்னீசியம் உணவில் அதிகா¢க்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகா¢க்கிறதோ அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் பு¡¢ந்து கொண்டு உணவு உற்கொள்ள வேண்டும். இறை அருளாலும், உணவு பழக்கத்தாலும் நாம் விரும்பும் குழந்தை பிறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 6 கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க அதிக துரம் பயணிப்பது கூடாது. அதிக பளுவான பொருட்களை தூக்குவதை நிறுத்தி விட வேண்டும். திருவிழா, சுற்றுலா செல்லுதல், கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தடுப்பது நல்லது. அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும். நோய் ஏற்பட்டு நுண் கிருமிகள் கர்ப்பத்தை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சா¢க்கையாக இருப்பது நல்லது. கர்ப்பிணிகளுக்கு நலோ¢யா காய்ச்சல், வைரஸ், போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதிக கவனம் தேவை கர்ப்பம் கலையும் சூழ் நிலை உண்டாகும். ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்பகாலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் அருந்துதல் புகைபிடித்தல் போதைப் பொருள் உட்கொள்ளல் போன்றவைகளாலும் கருகலையும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பம் தா¢த்த முதல் மூன்று, நான்கு மாதங்கள் குழந்தை உருவாகும் காலம் என்பதால் மிக எச்சா¢க்கையாக இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பது போன்ற செயல்களை தவிர்த்துவிட வேண்டும்.கர்ப்பகாலத்தில் உடையில் இரத்தப் போக்கு கண்டால் உடனே டாக்டா¢டம் என இருக்கக் கூடாது. நமது அஜக்கிரதையால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து உருவாகும் சூழ் நிலை உன்டாகும். எனவே, ரத்தப்போக்கு சிறிதளவு கண்டாலும். உடனே டாக்டா¢டம் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம். ஒரு முறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை வீக்காகி விடும். எனவே, உடனே கர்ப்பம் தா¢ப்பது கூடாது. குறைந்தது ஆறுமாத இடைவெளியாவது இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அடிக்கடி ‘ அபார்ஷன்’ ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பல கீனமாகிவிடும். ஒருமு¡¢ ‘அபார்ஷன்’ ஆகிவிட்டால் மிகுந்த எச்சா¢க்கையுடன் டாக்டா¢ன் ஆலோசனைப் படி நடந்து நல்ல குழந்தையை பெற்று எடுப்போம் என்ற மன ¨தா¢யத்தில் இருந்தால் குழந்தை நல்ல முறையில் பிறக்கும். 7 கர்ப்பிணி பெண்களும் ; உணவுப் பழக்கமும் கர்ப்ப காலட்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதல் குழந்தைக்கு வேண்டும். எவ்வாறு? இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா? இல்லை. சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சப்பிடுவது அவசியம். சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும். அதை எப்படி வாங்கி சப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து. அது கீரை, ஈரல், முட்டை, போன்ற வற்றில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம் பெற வேண்டும். குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பொ¢தும் வேண்டியுள்ளது. மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. சைவ உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய் சூப் போன்றவற்றை சப்பிடலாம். 25 மில்லி பாலில் இருந்து 30 கிராம் வெண்ணெயில் இருந்து 75 மி.கி வைட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது. கடலை, உளுந்து, பயிறு வகைகள், கீரை, பழம், இவற்றை சாப்பிட வேன்டிய அளவு சத்து குழந்தை க்கு கிடைக்கும். மேலும், இவ்வகை உணவுகளும் வாங்க இயலாத பெண்கள் பலர் வெற்றிலையை போட்டு வாயில், அடைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி உள்ள பெண்களுக்கு எவ்வாறு ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது நம்மில் பலர் நினைக்கலாம். வெற்றிலை, பாக்குகோடுபவர் அந்த சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளதால். அவர்கள் தேவையான அளவு பால் சாப்பிட்டதற்கு சமமான சத்ஹு கிடைத்து விடுகிறது. வழக்கமாக நாம் சாப்பிடும் சோறு, சப்பாத்தி, காய்கறிகளிலே தேவையான சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒழுங்காக சாப்பிட்டாலே குழந்தைக்கு வேண்டிய புரோட்டீன், வைட்டமின், தாது சத்துக்கள் கிடைத்துவிடும். 60மி.கிராம் இரும்புச்சத்தும், 500மி.கிராம் போலிக் ஆசிட் சத்தும், 2500 கலோ¡¢ புரோட்டீனும் தேவைப்படுகிறது. நமது உணவில் 100கிராம் புரோட்டீன் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் 5-6 கிராம் புரோட்டீன் உணவு அதிகம் சாப்பிட வேண்டும். என்று உலக ஆரோக்கிய அமைப்பு கூறுகிறது. புரோட்டீன் குறைவு ஏற்படும் போது குழந்தையின் தோல், நகம், முடி போன்ற வற்றில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை வளர்ச்சி குறைவு உடல் ஊனங்கள் போன்ற வற்றிற்க்கும்புரோட்டீன் குறைவே காரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு மிகுந்த உணவை சப்பிடுவதால் ‘கொலஸ்ட்ரால்’ அளவு கூடிவிடும். ‘பால்’ அதன் மூலம் தயா¡¢க்கும் கேக், பிஸ்கட்டுகள், இனிப்பு, பலகாரங்கள் அதிக அளவு சப்பிட்டாலும் ‘கொலஸ்ட்ரால்’ அதிகா¢க்கும். குழந்தை பிறக்க கடினமாகிவிடும். எனவே, தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. நார் சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும், பூசணிக்காய், சுரக்காய் போன்ற காய்கள் சப்பிடுவதால் ‘யூ¡¢ன்’ நான்றாகப் போகும். ‘கால்’ வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதி தடுக்கலாம். மேலும், பார்லி அ¡¢சியை ‘ தன்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறியபின் தண்ணீரை குடித்துவர ‘யூ¡¢ன்’ நன்றாகப் போகும். கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ‘மலச்சிக்கல்’ உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினமாக இருக்கும். எனவே, தினமும் இரவில் பழம் சப்பிடுவது நல்லது. அல்லது சறிதளவு சீரகத்தை எடுத்து ஒரு ‘டம்ளர்’ அளவு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். ‘அரைடம்ளர்’ அளவு தண்ணீர் வற்றிய பின் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெய் போட்டு கலக்கி குடித்து வர ‘மலச்சிக்கல்’ ஏற்படாது. பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் போன்ற வற்றை தவிர்ப்பது நல்லது. சில பெண்கள் அப்பழங்களை சாப்பிட்டால் எதுவும் ஆகாது. சில பெண்கள் சாப்பிட்டபின் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே, முடிந்த அளவு தவிர்ப்பது நலம். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது. உடனே படுப்பதால் உணவு ஜீரணிக்காமல் ‘வாந்தி’ வர ஏதுவாகிவிடும். சிறிது நேரம் நடந்து பின் படுக்கஸ் செல்வது நலம்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:

01: ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர

1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
02:மூலிகை ஷாம்பு

செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு கினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.
03:மரு, காலாணி குணமாக

கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்.
04:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது காக்கும் 'மூலிகைக் கண்மை'

வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
05:வெள்ளைபடுதல் நிற்க

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.
06: உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்

1. காலை மாலை நடைப் பயிற்சி
2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
3. பகல் தூங்காதிருத்தல்
4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்
6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்
9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்
10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.
07:இளைத்த உடல் பருமனாக

1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்
2. மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்
3. இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல்
4. உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல் 5. உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவில் வெகு நேரம் விழிக்காதிருத்தல்.

08:பேதி நிற்க

1. வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்த பொடி 50 கிராம், ஓமம் பொடி 10 கிராம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி மோரில் உட்கொள்ள உடன் தீரும்.
2. மாசிக்காய் பொடி (100 கிராம்), காய்ச்சுக் கட்டி (100 கிராம்), இலவங்கப்பட்டை (25 கிராம்) மூன்றையும் பொடித்து ஒன்றாகக் கலந்து மேற்கூறியபடி உண்ணவும்.
09:தேமல் மறைய

தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.
10:மலச்சிக்கல் தீர

1. கடுக்காயத் தோல் பொடி(100 கிராம்), ஓமம் பொடி (20 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் 1 1/2 - 2 தேக்கரண்டி (5-10 கிராம்) இள வெந்நீரால் பருக மலச்சிக்கல் தீரும். சிறியவர்களுக்கு அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
2. குப்பைமேனிச் சாறு (100 மிலி), விளக்கெண்ணெய் (500 மிலி) - இரண் டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சிச் சாறு வற்றியவுடன் இறக்கி வடிகட்டி 1 1/2 - 2 கரண்டி (5-10 மிலி) வீதம் உட்கொள்ள நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
3. அகத்திக்கீரைச் சாற்றை இரவு படுக்கும் முன் சர்க்கரை கலந்து 50-60 மிலி வரை பருக வயிற்றுப்புழுவுடன் மலச்சிக்கல் தீரும்.
11:மூலிகை காஸ்

நாட்பட்டப் புண்களின் மீது துணியினால் ஆன காஸ் வைப்பதற்கு பதிலாக எருக்கிலை, ஊமத்தை இலை, வெற்றிலை, வேலிப்பருத்தியிலை போன்ற மூலிகைகளின் ஏதாவது ஒன்றின் இலையை புண்களின் மீது வைத்து அதன் மேல் துணி கொண்டு கட்டிவர புண்கள் விரைவில் ஆறி வரும். புண்களை முறைப்படி சுத்தம் செய்து மருந்து வைத்து அதன்மேல் இலையை வைக்க வேண்டும்.
12:முகப்பரு

1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.
2. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் முல்தாணி முட்டி என்னும் சரக்கை பொடித்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும்.

3. நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10 எண்ணம் நன்கு சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும்.

மெலிந்த உடல் பருமனாக

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.

ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.

பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
காந்திய வழிமுறையின் ஆதாரமான முதல்கோட்பாடே இதுவாகத்தான் இருக்கமுடியும். ஒருபோதும் எந்தவகையான உச்சகட்ட மோதலுக்குப் பின்னும் காந்தி உறவுகளை முறித்துக்கொள்வதேயில்லை. அதை காங்கிரஸ்காரர்களே மிகுந்த கசப்புடன் பல தருணங்களில் எதிர்கொண்டிருக்கிறார்கள். காந்தியின் நம்பிக்கைகளை வைத்துப் பார்த்தால் முகமது அலி ஜின்னாவுடனான உறவை அவர் முறித்துக்கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்துகொண்டே இருந்தன.

குறிப்பாக முஸ்லீம்லீக் நேரடிநடவடிக்கை என்ற பேரில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை உடைத்து மனக்கசப்பை உருவாக்கி பாகிஸ்தான் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கவென்றே உருவாக்கிய வன்முறை வெறியாட்டத்துக்குப் பின்னர் அவர் அப்படிச்செய்திருந்தால் அதில் பிழை ஏதும் இல்லை. ஆனால் காந்தி அதைச் செய்யவில்லை. எப்போதுமே பேச்சுவார்த்தைக்கான இடத்தை விட்டு வைத்திருந்தார்.

இந்திய தேசியகாங்கிரஸின் வரலாற்றிலேயே விசித்திரமான பல சந்தர்ப்பங்களை நாம் காண்கிறோம். 1923 ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி சிறைசென்றிருந்தபோது மோதிலால் நேருவும் சித்தரஞ்சந்தாஸ¤ம் காங்கிரஸைக் கைப்பற்றி வெற்றிகரமாக உடைத்து சுயராஜ்யக் கடசி என்ற தனிப்பிரிவை உருவாக்கினார்கள். காந்தி 1924ல் வெளியேவந்தபோது அவர் உருவாக்கிய கட்சியின் சிதைவைக் கண்டார். அதற்கு எதிரான அவர் சமரசப்போராட்டத்தை நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களைப் புறக்கணித்து காந்தியின் தலைமைக்கு வந்தபோது அவர் அந்த மூத்த தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தார். அவர்களை வெளியே அனுப்பியிருந்தாலும் காங்கிரஸ¤க்கு எதுவும் ஆகியிருந்திருக்காது. ஆனால் காந்தி முற்றாக முறித்துக்கொள்ள ஒருபோதும் அவரே முன்வர மாட்டார்

2. கள ஆய்வுசெய்யுங்கள்

காந்தி அவரது எந்த முடிவையும் அவரது உள்ளுணர்வைச் சார்ந்தோ அல்லது ஊகத்தைச் சார்ந்தோ எடுக்கவில்லை. சில போராட்டங்களுக்கான தருணங்களும் படிமங்களும் மட்டுமே அவருக்கு அவரது உள்ளுணர்வு சார்ந்து கிடைத்தன. மற்றபடி அனைத்து விஷயங்களையும் அவரே நேரடியாக இறங்கி கள ஆய்வுசெய்துதான் அறிந்திருக்கிறார். தென்னாப்ரிக்காவில் அவர் சம உரிமைக்காகப் போராட ஆரம்பித்தபோது முதலில் தென்னாப்ரிக்காவின் இந்தியசமூகத்தை முழுக்க விரிவான பயணங்கள் மூலம் நேரடியாகப்போய்ச் சந்தித்தார். அதன் பின்னரே அவர் தன் போராட்ட உத்திகளை வகுத்துக்கொண்டார்.

இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்த கனவுடன் அவர் இந்தியாவுக்கு வந்தபோது ஏற்கனவே அவரிடம் பொருளியல் திட்டங்கள் இருந்தன. ஹிந்த் ஸ்வராஜ் என்ற ஆதார நூலை அவர் எழுதிவிட்டார். அரசியல் போராட்ட வடிவம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்துபார்த்தும் இருந்தார். இருந்தாலும் அவர் இந்தியா முழுக்க மூன்றாம் வகுப்புப் பயணியாக ரயிலில் பயணம்செய்து மக்களை நேரடியாகச் சந்தித்து ஆராய்ந்தார். அதன் வழியாக இந்தியா பற்றிய ஒரு நேரடி மனப்பதிவை அடைந்தார்.

தன் பயணங்களில் காந்தி இந்தியாவின் ஆன்மீகத்தலைவர்கள் பலரை நேரடியாகச் சென்று சந்தித்திருக்கிறார். சகோதரி நிவேதிதை முதல் நாராயணகுரு வரை. பல்வேறு அறிவியக்கவாதிகளை சந்தித்து உரையாடியிருக்கிறார். வேறு எந்த இந்தியத்தலைவரும் அத்தகைய ஒரு விரிவான நேரடி கள அனுபவத்தை திரட்டிக்கொண்டதில்லை. உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கர் ஒருமுறைகூட நாராயணகுருவை வந்து சந்திக்கவேண்டும் என எண்ணியதில்லை என்பதனுடன் நாம் காந்தியின் கள ஆய்வை ஒப்பிடவேண்டும். ஒரு ‘மகாத்மா’ ஆக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் அத்தகைய பயணங்களை பலமுறை அவர் முகமறியாது தனியாகச் செய்து பார்த்திருக்கிறார்.

சம்பாரன் போராட்டத்துக்காக அவரை விவசாயிகள் அழைத்தபோது காந்தி அங்கேயே சென்று தங்கி அப்பகுதி மக்களுடன் நேரடியாக பழகி அந்தப்போராட்டத்தை நடத்தினார். ஒருவருடம் அங்கே அவர் இருந்தார். அதேபோல இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு மேலைநாட்டு பொதுமக்கள் எவ்வகையில் எதிர்வினையாற்றுகிறார்கள் என்று அறிய அவர் 1932ல் ஐரோப்பாவில் அவரே சுற்றுப்பயணம் செய்தார்


3 செய்துபாருங்கள்


காந்தி ஒருபோதும் ஒரு விஷயத்தை வெறும் கோட்பாட்டளவில் விவாதித்தவரல்ல. அவர் அதுவரை உலகசிந்தனையில் இல்லாமல் இருந்த ஒன்றை அறிமுகம் செய்தார், அகிம்சைப்போராட்டம். ஆனால் அதை அவர் கோட்பாட்டுவடிவில் முதலில் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை. விவாதிக்கவில்லை. பிழையில்லாத ஒரு கோட்பாட்டுச்சித்திரத்தை முடித்துக் கொண்டு செயலாற்ற இறங்கலாமென அவர் நினைக்கவில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே செய்து பார்த்தார்!

காந்தி அவரது சத்யாக்ரக போராட்ட முறை அவர் மனதில் உதித்த சில மாதங்களில், தென்னாப்ரிக்காவில் 1906 ல் டிரான்ஸ்வால் நகரில், தன் முப்பத்தேழாவது வயதிலேயே சத்யாக்ரகப் போராட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்த்துவிட்டார். அந்தப்போராட்டம் பற்றி அவர் அறிந்தவை எல்லாமே நடைமுறைச்செயல்பாடுகள் வழியாகவே. அதன் விதிகளையும் நடைமுறைகளையும் அதற்குக் கொள்ளவேண்டிய எச்சரிக்கைகளையும் எல்லாம் அந்த செயல்பாடுகள் வழியாகவே ஆராய்ந்து உருவாக்கினார். நடைமுறைக்குச் சம்பந்தமில்லாமல் சிந்தனைத்தளத்தில் அதை வரையறைசெய்ய முயன்றதேயில்லை

4. சிறிய அளவில் தொடங்குங்கள்

காந்தி எதையுமே தடாலடியாக பெரிய அளவில் ஆரம்பித்ததில்லை. எல்லா போராட்டங்களையும் சிறிய அலகுக்குள் செய்துபார்த்து அதன் குறைகளை கவனித்து சரிசெய்த பின்னர்தான் விரிவாக அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். ஒத்துழையாமைப்போராட்டம் உப்புசத்யாக்கிரகம் எல்லாமே அவ்வாறுதான் அறிவிக்கப்பட்டன.


5 பிழைகளை திருத்துங்கள்.

காந்தி அவரது மொத்த அரசியல் வாழ்க்கையிலும் பிழைகளைத் திருத்திக்கொள்ள தயங்கியதே இல்லை. தன்னுடைய அகங்காரம் காரணமாகவோ அல்லது தன் பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவோ அல்லது மிகையான தன்னம்பிக்கை காரணமாகவோ தான் நம்பிவந்த ஒன்றை மறுபரிசீலனைசெய்வதற்கு அல்லது செய்து வந்த ஒன்றை நிறுத்திக்கொள்வதற்கு அவர் தயக்கம் காட்டியதில்லை.

இரு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று காந்தி ஒரு மேலைநாட்டு ஆய்வாளனின் கோணத்தில் இந்திய சமூகத்தை ஆராய்ந்து சாதியமைப்புக்கு ஒரு சமூக,பொருளியல் பங்களிப்பு உண்டு என்று நம்பினார். ஆனால் இந்திய யதார்த்தங்களை காங்கிரஸ் செயல்பாடுகள் வழியாக அவர் அறிந்து, அவற்றை வலுவாக முன்வைத்த நாராயணகுரு,அம்பேத்கார் போன்றவர்களிடம் விவாதித்து தெளிவடைந்தபின் தன் கருத்துநிலையை முற்றாகவே மாற்றிக்கொண்டார். சாதியமைப்பின் சமூக இடம் என்னவாக இருந்தாலும் அதில் இருந்து ஏற்றதாழ்வை நீக்கமுடியாது என்றும் ஆகவே அது அகிம்சைக்கு எதிரானது என்றும் உணர்ந்தார். அந்த புதிய கருத்துநிலைக்கு ஏற்ப தன் செயல்பாடுகள் சொந்த வாழ்க்கை அனைத்தையும் முற்றாக மாற்றிக்கொண்டார்.

அதனால் அவரைப் பின்தொடர்ந்தவர்களில் ஒரு சாரார் குழப்பம் அடைந்தார்கள். அவர் மீது கொலைமுயற்சிகள் நடந்தன. அவரது அரசியல் வாழ்க்கையிலேயே கடுமையான சோதனைகளை காந்தி சந்தித்தார். ஆனால் பிழையான ஒன்று நெடுங்காலத்தில் உருவாக்கும் அழிவை விட அந்த திருத்தம் மூலம் உருவாகும் அழிவு மிகக் குறைவானதே என அவர் எண்ணினார்.

அதேபோல அவர் வழிநடத்திய ஒத்துழையாமைப் போராட்டம் வன்முறை நோக்கி திரும்பி சௌரிசௌராவில் காவல்நிலையம் தாக்கப்பட்டதுமே அவர் அப்போராட்டத்தை அதன் உச்சநிலையிலேயே விலக்கிக் கொண்டார். அகிம்சை போராட்டத்துக்கு இந்திய சிவில்சமூகம் தயாராகவில்லை என்று அவர் நினைத்தார். இந்தியாவின் பொதுமக்களை நேரடியாக போராட்டத்துக்கு கொண்டுசெல்லலாகாது என கண்டுகொண்டார்

அவ்வாறு ஒத்துழையாமை போராட்டத்தை சட்டென்று விலக்கிக்கொள்வார் என நாட்டி எவருமே எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் கிடத்துவிடும் என்ற உத்வேகத்தில் இருந்தவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளானார்கள். அதன்பொருட்டு நேரு உட்பட காங்கிரஸ்காரர்கள் பெரும்பாலானவர்கள் காந்தி மேல் கசப்பு கொண்டார்கள். இன்றும் மக்கள் போராட்டங்களை முழுமையடைய விடாமல் பின்வாங்கச்செய்தவர் என காந்தியை குறைகூறுபவர்கள் உண்டு.

ஆனால் காந்தியைப் பொறுத்தவரை அடிப்படையில் பிழை இருக்கும்போது முன்ன்கர்வதென்பது தற்கொலைத்தனமானது. வீராப்புக்காக முன்னே செல்ல அவரால் இயலாது. காங்கிரஸில் லட்சக்கணக்கில் தொண்டர்களைச் சேர்த்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவர்களை நிர்வகிக்கும் அமைப்புகளையும் உருவாக்கியபின் அவர்களைக்கொண்டே காந்தி அடுத்த கட்ட அகிம்சைப்போராட்டங்களை முன்னெடுத்தார்


6 தொடர்பு வைத்திருங்கள்

காந்தி பலலட்சம் உறுப்பினர்கள் ஒருபிரம்மாண்டமான அமைப்பை வழிநடத்தியவர். விரிந்த ஓர் உபகண்டம் முழுக்க பரவியிருந்தது அவ்வியக்கம். அக்காலத்தில் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்குப் பயணம்செய்ய பதினைந்து நாள் ஆகும். கடிதம் சென்று வர ஒருமாதம் வரைக்கூட ஆகும். அத்தகைய ஒரு அமைப்பை சீராக நிர்வாகம் செய்ய அதற்கு ஒரு நிர்வாகப்படிநிலையை அவர் உருவாக்கினார். கிராமக்கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநிலக் கமிட்டிகள், மத்தியக்கமிட்டி என ஏறிச்சென்ற ஒரு பிரமிட் அமைப்பு அது.

அதன் தலைமையில் இருந்த காந்தி அதன் சாதாரண உறுப்பினர்கள் வரை நேரடியான தொடர்பு வைத்திருந்தார். அவர் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தபின்னரும்கூட அவர் எழுதிய கடிதங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே விசாரித்து அறிந்துகொண்டே இருந்திருக்கிறார். அவர் எவரிடம் எல்லாம் தொடர்பு வைத்திருக்கிறார் என்பது எவருக்குமே தெரியாது.

வட இந்தியாவில் இருந்த காந்தி தென்கோடியில் நாகர்கோயிலில் டாக்டர் எம்.வி.நாயுடுவுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரது தொடர்பு வலை அத்தகையது



7 நிபுணர்களை கலந்தாலோசியுங்கள்

காந்தி ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்ததில்லை. ஒரு சிறுவிஷயத்துக்குக் கூட அவர் அந்தத்தளத்தைச் சார்ந்த நிபுணர்களை சந்தித்து விவாதித்துக்கொண்டிருந்தார். உதாரணமாக சம்பாரன் சத்யாக்ரகத்தின்போது காந்தி அகமதாபாத் சென்று ஒருவாரம் தங்கி பல்வேறு சட்ட நிபுணர்களுடன் அந்தப்போராட்டத்தின் சட்டச்சிக்கல்களை விவாதித்தார். அந்தப்போராட்டத்தின் அரசியல் சாத்தியங்களை கேட்டறிந்தார். தன் மாபெரும் மக்கள் போராட்டங்களில் காந்தி மேலைநாட்டு அரசியல் நிருபர்களின் கருத்துக்களை எப்போதுமே கேட்டறிந்தார்.


8 பிரச்சாரம் செய்யுங்கள்

இருபதாம் நூற்றாண்டு வணிகத்தின் முக்கியமான அம்சத்தை மூத்தபனியா மிக நன்றாக அவதானித்திருந்தார். காந்தியை ஒரு மாபெரும் விளம்பர நிபுணர் என்று சொல்பவர்கள் உண்டு. கோடானுகோடி மக்களை அவர் திரட்டவேண்டியிருந்தது. அவரது போராட்டமே பிரச்சாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான். அந்தப்பிரச்சாரத்தை காந்தி அளவுக்கு வெற்றிகரமாகச் செய்த இன்னொரு அரசியல்தலைவர் இல்லை.

தான் சொல்லவிரும்பியதை ஐயத்துக்கிடமில்லாமல் கோடிக்கணக்கான மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி. அவரது நடை மிக மிக எளியது. இந்தியாவின் இதழியலாளர்களில் அவரே மிகத்திறன் வாய்ந்த முன்னோடி என்று என்னிடம் ஒருமுறை எம்.கோவிந்தன் சொன்னார். இன்றைய இந்திய இதழியலின் நடை உட்பட பல விஷயங்களை காந்தி தான் உருவாக்கினார். வாழ்நாள் முழுக்க சலிக்காமல் எழுதிக்கொண்டே இருந்தார் காந்தி. இன்று காந்தியின் மொத்த படைப்புகளை பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அன்றாட அரசியல் செயல்பாடுகளின் மலைமலையான வேலைகளுக்கு நடுவே இத்தனையையும் எழுதிக்குவித்திருக்கிறார்! அவர் இந்தியாவிடம் ஓயாமல் உரையாடிக்கொண்டிருந்தார்!



9 குறியீடுகளை பேசவிடுங்கள்

தன்போராட்டத்துக்கு காந்தி எப்போதுமே திறன் வாய்ந்த குறியீடுகளை உருவாக்கிக் கொண்டார். சொற்களைவிட ஆழமாக அவை பொது மக்களிடையே சென்று சேரும் என அவர் அறிந்திருந்தார். சர்க்கா அவரது சக்தி வாய்ந்த குறியீடு. அவரது அரைவேட்டி, அவருக்குப்பின்னால் சென்றுகொண்டிருந்த கழிப்பறை, உப்பு என அவரது குறியீடுகள் ஏராளமானவை.

காந்தி 1915ல் முதன்முதலாக காங்கிரஸ் மாநாட்டில் காந்தி கலந்துகொண்டபோது அவர் ஒரு குஜராத்தி விவசாயியின் தோற்றத்தில் முண்டாசும் இந்தியச் சட்டையுமாக வந்து பேசியது ஓர் உதாரணம். மேலைநாட்டு உடைகள் அணிந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் அவர் சட்டென்று தனியாகத்தெரிந்தார். சலித்துப்போன கூட்டம் சட்டென்று அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிததது

அவரது போராட்டங்களை அறிவித்த முறையிலேயே அந்த நாடகத்தன்மை எப்போதும் இருப்பதைக் காணலாம். அன்னியத்துணிகளை புறக்கணிப்பதும் சரி உப்பு சத்தியாக்கிரகமும் சரி. ஏன் லண்டனுக்கு ஆட்டுடன் சென்று இறங்கி அரையாடையுடன் சென்று பிரிட்டனின் மகாராணியைப் பார்த்தது வரை எல்லா நிகழ்வுகளிலும் திட்டவட்டமான பிரச்சார நோக்கம் உண்டு. அவர் சொல்ல எண்ணிய விஷயத்தை அந்தச்செயல்களே திட்டவட்டமாக அனைவருக்கும் தெரிவித்துவிடும்.


10 தவிர்க்கமுடியாதபோது மட்டுமே எதிர்த்து நில்லுங்கள்

காந்தியின் போராட்டத்தின் முக்கியமான கூறு இது. இதை அவரது சகாக்கள் பெரும்பாலும் புரிந்துகொள்ளவில்லை. எதிர் தரப்பு என்பது ஆட்டத்தின் மறுகட்சி மட்டுமே என்ற நிதானத்துடன் மட்டுமே அவர் எப்போதும் செயல்பட்டிருக்கிறார். அவர்களை எதிரிகளாக அவர் எண்ணியதில்லை. ஆகவே அவர்களின் நல்லியல்புகளை அவர் புரிந்துகொண்டார். அவர்களுடன் எங்கெல்லாம் ஒத்துப்போக முடியுமோ அங்கெல்லாம் ஒத்துப்போனார். எங்கே உறுதியாக எதிர்த்துப்போரிடவேண்டுமோ அங்கே மட்டுமே அதைச்செய்தார்

பிரிட்டிஷாரின் சட்ட அமைப்பில் காந்திக்கு நம்பிக்கை இருந்தது. அவர்களின் இதழியலிலும் அவர்களின் நாட்டில் இருந்த ஜனநாயகப்பண்புகளிலும் காந்தி ஆழமான மதிப்பு கொண்டிருந்தார். அவற்றை தன் நட்பு சக்திகளாக மட்டுமே அவர் அணுகினார். எங்கெல்லாம் பிரிட்டிஷ் அமைப்பு சாதகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் அதனுடன் ஒத்துழைத்தார். மூர்க்கமான ஒற்றைப்படையான எதிர்ப்பை அவர் முன்வைக்கவில்லை

ஒரு விஷயத்தில் பிரிட்டிஷ் சட்டம் என்னென்ன உரிமைகளை அளிக்கிறதோ அதையெல்லாம் அடைவதற்கே காந்தி எப்போதும் முயல்கிறார். அதன் பின் அச்சட்டத்துக்கு அப்பால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்று பார்க்கிறார். தேவைப்பட்டால் அதற்காக போராட்டத்தை முன்னெடுக்கிறார். போராட்ட சக்தியை ஒருபோதும் வீம்புக்காக வீணடிப்பதில்லை அவர்.


11. சமரசத்துக்கு எப்போதுமே இடமிருக்கும் என நினைவில் வைத்திருங்கள்.

காந்தி போராட்டத்தை சமரசத்தை நோக்கிச் செல்லவேண்டிய ஒரு பயணமாகவே கண்டார். ‘கடைசிவெற்றி’வரை செல்லக்கூடிய ஒரு போராட்டம் என்று ஒன்று இல்லை. எதிரிகளை அல்லது எதிர்தரப்பை முழுமையாக அழித்தொழித்துவிட்டு ஒரு வெற்றி என்பது அனேகமாகச் சாத்தியமில்லை. நம் எதிர்தரப்புக்கும் அதற்கான இருப்பும் நியாயங்களும் உண்டு. அவர்களுக்கும் ஆசைகளும் திட்டங்களும் இருக்கும். அவற்றுக்கும் இடம்கொடுக்கும் ஒரு முடிவே தீர்வாக இருக்க முடியும்.

ஆகவே போராட்டம் என்பது நமது தரப்பை முழுமையாக திரட்டிக்கொண்டு நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி நம்முடைய கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமே. நம் தரப்பை தவிர்க்கமுடியாது என்று நம் எதிர்தரப்பு உணர்ந்ததுமே சமரசத்துக்கான இடம் ஆரம்பமாகிறது. நம் இடத்தை எதிர்தரப்பு அங்கீகரிப்பதைப்போலவே எதிர்தரப்பை நாமும் அங்கீகரிப்பதே சமரசம். சமரசம் என்பது இருவரும் சிலவற்றை அடைந்து சிலவற்றை விட்டுக்கொடுத்து அடையும் ஒரு பொதுமுடிவு.

காந்தி அவர் உயிரென மதித்த சில விஷயங்களில் அபாரமான பிடிவாதம் கொண்டவர். ஆனால் எப்போதும் பேச்சுவார்த்தைக்கும் சமரசத்துக்கும் தயாராக இருந்தார். எப்போதும் விட்டுக்கொடுத்து இறங்கிவர சித்தமாக இருந்தார். உப்புசத்யாக்ரகத்தை ஒட்டி நடந்த பெரும் எழுச்சியின் உச்சியில் அவர் காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி சமரசம்செய்துகொண்டார். அதன் மூலம் தன் தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்துகொண்டு தன் வலிமைகளை தொகுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைமேஜைமுன் அமர்ந்தார். எல்லா போராட்டத்தின் உச்சியிலும் காந்தி சமரசத்துக்கே முயன்றிருக்கிறார்.

பிற்கால மார்க்ஸிய ஆய்வாளரான அண்டோனியோ கிராம்ஷி இவ்வகை போராட்டத்தை நிலையுத்தம்[ Static war] என்று சொல்கிறார். போராட்டம் மூலம் சமரசத்துக்குச் சென்று கிடைத்த லாபங்களை தக்கவைத்துக்கொண்டு அந்த தளத்தில் தன்னை நிலைநாட்டிக்கொண்டு அடுத்த கட்ட போராட்டத்தை அடைதல். இந்நிலையில் போராட்டம் நடுவே சமரசம் மூலம் கிடைக்கும் லாபங்களே மேலும் போராடுவதற்கான ஆற்றலை அளிக்கின்றன


12 சின்னவிஷயங்களில் கவனம் கொள்ளுங்கள்

காந்தி ஒருமாபெரும் இயக்கத்தை நடத்தியவர். லட்சக்கணக்கில் பணம் அவர் வழியாகச் சென்று கொண்டிருந்தது இயல்பே. மிகப்பெரிய போராட்டங்களில் எப்போதும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் எப்போதும் சின்ன விஷயங்களிலும் கூர்ந்த கவனம் கொண்டிருந்தார். பலலட்சம்பேர் சேர்ந்து செய்யும் செயலில் ஒருவர் செய்யும் சின்ன பிழை பலரால் செய்யப்பட ஆரம்பித்தால் பெரும் வீழ்ச்சியாக ஆகிவிடும் என அவர் பயந்தார்


உதாரணமாக காந்தி முதன்முதலாக 1915ல் இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு சென்றபோது அவரது கண்ணில்பட்டது அங்கே இருந்த சுகாதாரக் கேடுகள்தான். சமையலறை ஒழுங்கில்லாமல் இருந்தது. கழிபப்றைகள் நாறிக்கொண்டிருந்தன. அவரது கவனம் அதில்தான் முதலில் பதிந்தது

காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்கவேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து ‘மகாத்மாக்களை வழிபடலாம் சேர்ந்து பணியாற்ற முடியாது’ என்று கணக்குபுத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியேறியிருக்கிறார். ஆனால் ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு என காந்தி எண்ணினார்.

பழைய காகிதங்களை திரும்ப பயன்படுத்துவது, உள்ளூர் பொருட்களைக் கொண்டே குடில்கள் அமைப்பது என சின்னச் சின்ன செலவுகளை காந்தி எப்போதும் பார்த்துப் பார்த்துச் செய்தார். ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்



13 ஆறப்போடுங்கள்

காந்திய வழிகளில் ஒன்று பிரச்சினைகளை ஆறப்போடுவதாகும். பல சமயம் பிரச்சினைகளை நாம் உணரும்போது அவை உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும். அவற்றில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புமே உச்சகட்ட கொந்தளிப்புடன் இருக்கும். அந்நிலையில் அதில் செய்யப்படும் எந்த முயற்சியும் அந்த உச்ச கட்ட மோதலில் ஒரு தரப்பாகவே ஆகிவிடும். நாமும் அந்தப்பிரச்சினையின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு எதிர்வினையாற்றி நம்முடைய நிதானத்தை இழப்போம். நம்முடைய அலசி ஆராயும் திறன் இல்லாமலாகும்.

அது கொதித்துக்கொண்டிருக்கும் ஒருபொருளைக் கையாள்வது போன்றது. அல்லது நான்குதிசையிலும் நான்கு பேர் இழுக்கையில் ஒரு சரடின் மையமுடிச்சை அவிழ்க்க முற்படுவதற்குச் சமம்.

அதைச் சமாளிக்கச் சிறந்த வழி ஒத்திப்போடுவதுதான். அதன் வெப்பம் தணியும் வரை காத்திருப்பது. பெரும்பாலான விஷயங்கள் ஒத்திப்போடுவதனால் பேரிழப்புகள் எதையும் அளிக்காதவையாகவே இருக்கும். அந்நிலையில் அவை இயல்பாக அந்த உச்சநிலையை தாண்டி முறுக்கத்தை இழந்து முடிச்சு நெகிழ ஆரம்பிப்பது வரை காத்திருக்கலாம்.

ஆனால் காந்தி சொல்வது உதாசீனப்படுத்துவதை அல்ல. வேறு வேலைக்குச் சென்றுவிடுவதை அல்ல. அந்தப்பிரச்சினையை அதில் பங்குகொள்ளாமல், ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாடு ஏதும் இல்லாமல், அதைக் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருத்தல். அது உருவாக்கும் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையுடன் இருத்தல்.

இரு உதாரணங்கள். ஆங்கில அரசு காட்டிய பதவியாசை காரணமாக காங்கிரஸை பிளக்க மோதிலால் நேருவும் சித்தரஞ்சன் தாஸ¤ம் முடிவுசெய்தபோது சமரசங்கள் பயனிழந்தபோது காந்தி அந்தப் பிரச்சினையில் இருந்து விலகிக் கொண்டார். கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். 1923 முதல் 1928 வரை ஏறத்தாழ றாஐந்து வருடம் பொறுமையாக காத்திருந்தார். ஆனால் உன்னிப்பாக நிலைமைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். காங்கிரஸின் மீதான தன் கட்டுப்பாட்டை மட்டும் கையில் வைத்திருந்தார்.

நான்கே வருடங்களில் அந்தமோதல் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமலாகியது. சரித்திரத்தின் இயல்பான பரிணாமம் பதவியாசைகொண்ட மூத்தவர்களை ஓரம்கட்டியது. காந்தி கட்சியில் சேர்த்துக்கொண்டே இரு

பேரன் பிரபுதாஸ் காந்தியுடன் காந்தி கரிஜன் பெண்கள் பள்ளியில்

காந்தியைப்பற்றிய அரட்டைகளில் அடிகக்டி அவர் தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். தமிழில் எழுத்தாளர்கள் கூட அவ்வாறு நிறைய எழுதியிருக்கிறார்கள். காந்தியைப் பற்றிய யாருக்கும் தெரியாத உண்மை தங்களுக்குத் தெரியும் என்ற பாவனையில் அதைச் சொல்லி அதற்காக காந்தியை மன்னிப்பார்கள்.
காந்தி தன் குழந்தைகளைப் அவர்களைப் புரிந்துகொள்ள மறுத்தாரா? அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்தாரா? மீண்டும் மீண்டும் இந்த தகவல்கள் நம் பொதுமேடையில் வைக்கப்படுகின்றனவே, எவராவது உண்மையை நோக்கி ஓர் எளிய ஆய்வையாவது செய்திருக்கிறார்களா? இதைச் சொல்பவர்களிடம் ‘சரி காந்தியின் நான்கு பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேளுங்கள். நான் கேட்ட ஒருவர்கூட பதில் சொன்னதில்லை.

காந்திக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் ஹரிலால் (1888-1948) அடுத்து மணிலால் (1892-1956) மூன்றாவது ராம்தாஸ் (1897-1969) கடைசியில் தேவதாஸ் (1900-1957). ஹரிலால் காந்தி தம்பதியர் இந்தியாவில் இருக்கையிலேயே பிறந்துவிட்டார். பிற மூவரும் தென்னாப்ரிக்காவில் அவர்கள் இருக்கும்போது பிறந்தவர்கள்.
உண்மையில் காந்தி பிள்ளைகளை எப்படி நடத்தினார்? நாம் சாதாரணமாகக் காணும் ‘பாசப்பிழம்பான’ அப்பா அல்ல காந்தி. அவருக்கு அவர் நம்பிய விழுமியங்களே முக்கியம். அதற்கு அப்பால் அவருக்கு எதுவுமே பெரிதல்ல. வாழ்க்கை என்பதே அவருக்கு சத்தியசோதனைதான். ஆகவே தான் எந்த நெறியைக் கடைப்பிடித்தாரோ, உலகுக்கு எந்த நெறியை உண்மை என பரிந்துரைத்தாரோ அந்த நெறியைக் கடைப்பிடிக்கும்படி குழந்தைகளை அவர் வளர்த்தார். மேடையில் கதர் போட்டுக்கொண்டு குழந்தைகளுக்கு பட்டு வாங்கித்தரும் இரட்டைவேடதாரி அல்ல அவர்.
குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும்போதே காந்தி ஆசிரம வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்.தேவதாஸ¤க்கு நான்குவயதிருக்கும்போதே அவர்கள் பீனிக்ஸ் ஆசிரமத்துக்கு வந்தாயிற்று. அங்கே பலவகைப்பட்ட மக்கள் இருந்தார்கள். தொழுநோயாளிகள்கூட. அனைவருக்கும் கடமைகள் இருந்தன. காந்தி அனைவரிடமும் சமானமான அன்பையே காட்டினார். சமானமான அக்கறையையே வெளிப்படுத்தினார். தன் குழந்தைகளுக்கு எந்த சலுகைகளையும் காட்டவில்லை. காட்டியிருந்தால் அவர் காந்தியே அல்ல
மூத்தவரான ஹரிலால் இந்தியச்சூழலில் பிறந்தவர். 1891ல் காந்தி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து இந்தியா திரும்புவதுவரை காந்தியின் இல்லத்தில் காந்தியை அறியாமல் ஹரிலால் வளர்ந்தார். 1983ல் காந்தி ஹரிலாலை மட்டும் ராஜ்காட்டில் தன் அண்ணனுடன் விட்டுவிட்டு தென்னாப்ரிக்காவுக்கு சென்றார். அங்கே அவர் ஒரு சுதந்திரப்போராளியாக ஆனார். அப்போது ஹரிலால் ராஜ்காட்டில் படித்துக்கொண்டிருந்தார்
காந்தியின் ஆளுமை 1903 ல்தான் புரட்சிகரமான மாறுதல்களுக்கு உட்படுகிறது. அவர் அதுவரை ஒரு உயர்தர பாரிஸ்டருக்கான வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரமானவர். ஆனால் சட்டென்று அவர் அனைத்தையும் துறக்க ஆரம்பித்தார். எளிமையான வாழ்க்கைக்கும் கடுமையான நெறிகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். இந்தக் காலகட்டத்திலெல்லாம் வரை ஹரிலாலுடன் காந்திக்கு ஒரு தந்தை என்ற நிலையில் நேரடி உறவே சாத்தியமாகவில்லை. சூழ்நிலைகள் அப்படி அமைந்திருந்தன.
ராஜ்காட்டில் வசதியான குடும்பத்தில் தந்தையின் கண்காணிப்பில்லாமல் வளர்ந்தார் ஹரிலால்.மக்காலத்து இந்திய நகர்ப்புற இளைஞர்களின் வாழ்க்கையை நாம் சரத் சந்திரர், மௌனி, குபரா போன்றவர்களின் எழுத்துக்களில் காணலாம். தாசிகளுடன் தொடர்பும் மதுவருந்துதலும் அன்று மிகவும் சாதாரணம். செழிப்பான சூழலில் வாழ்ந்த ஹரிலால் அந்தவாழ்க்கைக்குள் சென்றார்.
கடிதத்தொடர்புவசதிகள் குறைந்த அக்காலகட்டத்தில் தென்னாப்ரிக்கா என்பது மிகநெடுந்தூர நாடு. ஹரிலால் தன் தந்தையின் அறிதல் இல்லாமலேயே குலாப்ஐ மணந்துகொண்டார். ஹரிலாலுக்கு போதிய அறிவுத்திறன் இருக்கவில்லை. மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி தோல்வியடைந்தார்.சுயமான முடிவெடுக்கும் திறந் இல்லை. ஆகவே எப்போதுமே நண்பர்களே அவர் வாழ்க்கையைத் தீர்மானித்தார்கள்.
ஹரிலால் படிப்பில் கோட்டைவிட்டதை அறிந்தபோது பீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்த காந்தி ஹரிலாலை தன்னுடன் வந்து இருக்குமாறும் தனது போராட்டங்களில் பங்குகொள்ளுமாறும் அழைத்தார். தென்னாப்ரிக்கா வந்த ஹரிலாலை தென்னாப்ரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுத்தினார்.

அன்று காந்தி எல்லாவிதமான வசதிகளையும் துறந்து மிக எளிமையான ஆசிரம வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருந்தார். கடுமையான நெறிகளை தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் விதித்துக்கொண்டார். பதினெட்டு வயதான ஹரிலாலால் அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆசிரமத்தில் காந்தி பிறரை நடத்தியது போலவே ஹரிலாலையும் நடத்தினார். தனிப்பட்ட சலுகைகள் எதையுமே காட்டவில்லை. அது ஹரிலாலை புண்படுத்தியது.
ஏன் கஸ்தூர்பாவாலேயே எளிதில் அந்த மாற்றத்தை ஏற்க முடியவில்லை. அவரும் காந்தியை எதிர்த்து போராடினார். குறிப்பாக காந்தி தீண்டப்படாத சாதியினரை உடன் தங்கவைத்ததும், அவர்களும் பயன்படுத்தும் பொதுக்கழிவறையை முறைவைத்து அனைவருமே சுத்தம்செய்யவேண்டும் என்று சொன்னதும், ஆசாரவாதியான கஸ்தூர்பாயை கொந்தளிக்கச் செய்தன. இன்றைக்கு நூறுவருடம் முன்பு அது எத்தனைபெரிய மீறல் என்பதை இன்று ஊகிப்பது கடினம்.
இளமைக்குரிய ஆவேசமான மூர்க்கத்துடன் காந்தி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கஸ்தூர்பாயின் கண்ணீருக்கு முன்னால் அவர் பணிவதை சுயசரிதையில் நாம் காணலாம். மெல்லமெல்ல கஸ்தூர்பாயை தன் தரப்புக்கு முழுமையாக இழுத்தார் காந்தி. அதற்கு கஸ்தூர்பாயின் பரிபூரணமான சுயசமர்ப்பணமும் உதவியது. ஆனால் ஹரிலால் அந்த சீர்திருத்தங்களை ஏற்க இயலாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஹரிலாலிடம் காந்தி மீண்டும் மீண்டும் தன் நோக்கங்களை விளக்கிப்புரியவைக்க முயன்றார். ஆனால் ஹரிலால் வாழ்நாளின் கடைசிவரை சராசரிக்கும் கீழான அறிவுத்திறனையே வெளிப்படுத்தியவர். அவருக்கு காந்தியை புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கவில்லை. காந்தியே அவருக்கு ஓர் அன்னியராகவே தோன்றினார்.
ஹரிலாலில் நோக்கில் காந்தி தன் சௌகரியமான வாழ்க்கையைப் பறித்துவிட்டார் என்றே தோன்றியது. ஆடம்பரப்பிரியரான ஹரிலால் பண்ணையில் வேலைசெய்வதை வெறுத்தார். ஆனால் அனைவருமே உடலால் வேலைசெய்தாகவேண்டும் என்பதுதான் காந்தி கடைசிநாள் வரை முன்வைத்த கோட்பாடு. அதிலிருந்து தனக்கோ தன் பிள்ளைகளுக்கோ அவர் விதிவிலக்கு அளிக்கவில்லை.
மேலைநாட்டுக் கல்வியை முழுமையாக நிராகரித்தார் காந்தி. இந்தியக் கல்விக்காக வாதாடினார். இந்தியாவில் தாய்மொழிவழிக்கல்விக்காக எழுந்த முதற்குரல் காந்தியுடையது. ஆனால் ஹரிலால் பிரிட்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்க விரும்பினார். அதற்கு காந்தி நிதியுதவி செய்ய வேண்டுமென கோரினார். அனைத்தையும்விட முக்கியமாக அத்தகைய படிப்புக்கான அடிப்படைக் கல்வித்தகுதி ஹரிலாலுக்கு இருக்கவில்லை. அவர் மெட்ரிகுலேஷனே வெல்லவில்லை, கடைசிவரை.
1910 ல் காந்தி தன் பொருளியல்தேவைக்காக வேலைசெய்வதை முற்றாக நிறுத்திவிட்டிருந்தார். நேட்டால் இந்தியக் காங்கிரஸின் ஊழியராக குறைவான உதவித்தொகை பெற்றுக்கொண்டு துறவுவாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டிருந்தார். ஆகவே அவர் பொருளியல்ரீதியாகவும் ஹரிலாலின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. தென்னாப்ரிக்க தொழிலதிபர்களிடம் நிதியுதவிபெற்று தரும்படி ஹரிலால் கோரினார். ஆனால் காந்தி அதை முறையான செயலாக எண்ணவில்லை.
விளைவாக ஹரிலால் 1911ல் எல்லா குடும்ப உறவுகளையும் நிராகரித்து வெளியேறி இந்தியா வந்தார். முன்னரே அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இந்தியாவில் மெட்ரிகுலேஷன் தேர்வை பலமுறை எழுதி தோற்றார். காந்திகுடும்பத்தின்செலவில் சோம்பேறியாகவும் குடிகாரராகவும் வாழ்ந்தார். விபச்சாரத்தில் வெளிப்படையாகவே ஈடுபட்டார். அகமதாபாதில் அவருக்கு மூன்று ஆசைநாயகிகள் இருந்தார்கள்.
1915ல் காந்தி இந்தியா திரும்பிய போது முற்றாக நொடித்துப்போய் ஆசைநாயகிகளால் துரத்தப்பட்டு கடன்காரர்களால் வேட்டையாடப்பட்ட ஹரிலால் மீண்டும் காந்தியிடம் வந்து தனக்கு தொழில் தொடங்க பணம் தரும்படி கட்டாயப்படுத்தினார். காந்தி அப்போது கிட்டத்தட்ட பணமே இல்லாத பொது ஊழியராக இருந்தார். தன்னுடன் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபடும்படி ஹரிலாலிடம் சொன்னார் காந்தி. அவரது கெட்டபழக்கங்களை விட்டுவிடும்படி மன்றாடினார். ஆனால் ஹரிலால் மீண்டும் கட்டாயப்படுத்தவே ஹரிலால் திருந்த ஒரு வாய்ப்பாக அமையட்டும் என எண்ணி தன் நெறிகளை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு கல்கத்தாவில் ஒரு நிறுவனத்துக்கு காந்தி அவரை சிபாரிசு செய்தார்
கல்கத்தாவில் வேலைசெய்த ஹரிலால் அங்கே பெரும் பணத்தை ரகசியமாகக் கையாடல் செய்து ஒரு தனி வியாபாரத்தை ஆரம்பித்தார். அதில் ஊதாரித்தனமாக அந்தப்பணத்தை இறைத்து அழித்தார். மோசடிக் குற்றச்சாட்டு வந்தபோது காந்தி அதிர்ச்சி அடைந்தார். கடும் மன உளைச்சலுடன் எது நியாயமோ அதைச்செய்யும்படியும் தன் மகன் என்ற கரிசனை தேவையில்லை என்றும் அதிகாரிகளிடம் காந்தி சொல்லிவிட்டார். ஹரிலால் சிறைக்குச் செல்ல நேர்ந்தது.
சிறைமீண்ட ஹரிலால் மீண்டும் காந்தியிடம் வந்து அடைக்கலம் புகுந்தார். அவரது அடிப்படை இயல்பை மிக நன்றாக உணர்ந்திருந்தும் காந்தி அவரை அணைத்துக்கொண்டார். அவரது உடல்நலத்தை தேறச்செய்யவும் தீய பழக்கங்களை நீக்கவும் தன்னை அர்ப்பணித்துக்கோண்டு கடுமையாக முயன்றார். ஆனால் ஹரிலாலின் இயல்பான தீய இயல்பு அவரை விடவில்லை. காந்தி ஹரிலாலிடம் காட்டிய பிரியத்தையே ஹரிலால் சுயநலமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஒரு மோசடிக்கும்பலைச் சேர்த்துக்கொண்டு காந்தியின் பெயரை பயன்படுத்தி பலரிடம் பங்கு பணம் பெற்றுக்கொண்டு போலியான தொழில்களை ஆரம்பித்து அந்தப்பணத்தை குடித்தும் விபச்சாரம்செய்தும் செலவழித்தார்.
கடைசியில் ஏராளமான ஏழைகளின் பணம் பறிபோயிற்று என்பது வெளியாகியது. மோசடிக்கு ஆளான ஏழைகள் அரசுக்கு புகார் செய்தார்கள். காந்தியின் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள் அவை. காந்தியே மோசடிசெய்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஹரிலால் இனிமேல் தன் மகன் அல்ல என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. அவருக்கு எவரும் தன் பெயரால் நிதியளிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.
காந்தியை துறந்து சென்று பெருங்குடிகாரராக மாறிய ஹரிலால் அதன் பின்னரும் காந்தியின் பெயரைச்சொல்லி பலரிடமிருந்தும் நிதி பெற்று குடித்து அலைந்தார். பலமுறை கைகலப்புகளுக்காகவும், சில்லறைத்திருட்டுகளுக்காகவும், மோசடிக்காகவும், பொது இடங்களில் விபச்சாரம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டார். தன் மனைவி குலாபை தினமும் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தார். தன் குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு தப்பி ஓடிய குலாபை அங்கே சென்று பணம்கேட்டுக் கொடுமைசெய்தார்.
மனமுடைந்து படுத்த படுக்கையான குலாப் காலராவால் இறந்தார். அவரது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு காந்தியிடம் வந்தது. இக்காலகட்டத்தில் குழந்தைகளை தன்னுடன் கூட்டிச்செல்லப்போவதாகச் சொல்லி மிரட்டி காந்தியிடம் பணம் பறித்தார் ஹரிலால். காந்தி அந்நிலையில்கூட ஹரிலாலை தன்னுடன் இருக்கும்படி மன்றாடினார். ஆனால் அதற்குள் தெருவாழ்க்கைக்குப் பழகிவிட்டிருந்தார் ஹரிலால்.
தனக்கு மீண்டும் திருமணம்செய்து வைக்கும்படி காந்தியைக் கட்டாயப்படுத்தினார் ஹரிலால். ஆனால் ஹரிலாலின் குணம் தெரிந்த காந்தி அதைச் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதற்காக காந்தியை வசைபாடி கடிதங்கள் எழுதினார். புலன்களை அடக்கப்பழகும்படி ஹரிலாலுக்கு பதில் கடிதம் எழுதினார் காந்தி.
காந்தி ஹரிலாலிடம் பேச, அவரிடம் தன் கொள்கைகளை விளக்க மீண்டும் மீண்டும் முயன்றார். ஆனால் அதற்கான நிலையில் ஹரிலால் இருக்கவில்லை. பிற மகன்களிடம் சொல்லி ஹரிலாலை மீட்க பலமுறை முயன்றார் காந்தி. ஹரிலாலை ஒருமுறைகூட அவர் குறைசொன்னதில்லை, தன் பிழையாலேயே அவர் அப்படி ஆனார் என்றார். அவரை திருத்தும் அளவுக்கு தன்னிடம் ஆன்மபலம் இல்லை என்பதே பிரச்சினை என்றார்.
1942ல் முஸ்லீம்லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து கடுமையான காந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தியபோது இஸ்லாமிய மதகுருக்கள் ஹரிலாலிடம் பேசி அவரை முஸ்லீமாக மதம் மாற்றினார்கள். அப்துல்லா காந்தி என அவர் மாறினார். முஸ்லீம்கள் அவரது கடன்களை அடைத்தார்கள். முஸ்லீம் உடையில் அவரை நாடெங்கும் கொண்டுசென்று முஸ்லீம் லீக் கூட்டங்களில் காந்தியைப் பற்றிய அவதூறான வசைகளைச் சொல்ல வைத்தார்கள். சென்னைக்குக் கூட ஹரிலால் வந்திருக்கிறார். பல மேடைகளில் கடும் போதையில் ஹரிலால் மயங்கி விழுந்திருக்கிறார். ஆனால் கராச்சியில் ஒருமேடையில் ஒரு முல்லா காந்தியைப்பற்றி அவதூறாகப் பேசியபோது ஹரிலால் செருப்பை உருவி அவரை அடித்தார்.
ஹரிலாலின் மதமாற்றம் காந்தியை கடுமையாகப் புண்படுத்தியது.ஹரிலால் இஸ்லாமுக்கு அந்த மதத்தின் நம்பிக்கைகளை ஏற்று மதம் மாறியிருந்தால் அதை தானே வரவேற்றிருப்பேன் என்றார் காந்தி. ஒரு மது அடிமையை அவரது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் நோக்குடன் மதம் மாற்றுவதும், அவனது தந்தையை வசைபாடும் பாவச்செயலை செய்ய வைப்பதும், தீர்க்கதரிசியையே இழிவுசெய்வதாகும் என்று வருந்தினார்.
என்ன வேடிக்கை என்றால் ஹரிலால் மேடையிலேயே தனக்கு மது வாங்கித்தந்ததனால்தான் மதம் மாறினேன் என்று சொல்லியிருக்கிறார். அவரது தேவை முடிந்ததும் முஸ்லீம்லீக் அவரைக் கைவிட்டது. மீண்டும் தெருவில் அலைந்த ஹரிலால் இந்துவாக திருப்பி மதம் மாறினார். ஆனால் ஹரிலால் திருப்பி இந்துவாக மதம் மாறியதையும் காந்தி ஏற்கவில்லை. ஹரிலால் தீனை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அந்த மதத்துக்கே விசுவாசமாக இருக்கவேண்டும், எல்லா மதங்களும் ஒன்றே என்றார் காந்தி.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது ஹரிலால் தெருப்பிச்சைக்காரனாக வாழ்ந்துகோண்டிருந்தார். 1948ல் காந்தியின் இறுதி நிகழ்ச்சிகளின்போது ஹரிலால் வந்திருந்தார். தந்தைக்கு ஆற்றிய பிழைகளை எண்ணி கதறி அழுதார். ஆனால் அவரை எவரும் அடையாளம் காணவில்லை.
காந்தியின் மரணம் ஹரிலாலுக்கு காந்தியை புரியவைத்தது. அவரது கண்களை மறைத்திருந்த வீம்பு இல்லாமலாகியது. காந்தியை எண்ணி மனம் வெதும்பிக்கொண்டிருந்தார். ஈரலும் கெட்டுபோயிருந்தது. காந்தி இறந்து ஐந்து மாதம் கழித்து மும்பையில் நகராட்சி மருத்துவமனையில் ஹரிலால் இறந்தார் [1948 June 18]
ஹரிலாலுக்கு குலாபில் ஐந்து குழந்தைகள். அவரது மூத்தமகள் ராமிபெஹனின் மகளான நீலம் பரிக் ஹரிலாலின் வாழ்க்கையை காந்திஜியின் தொலைந்துபோன நகை [Gandhiji's Lost Jewel: Harilal Gandhi ,Nilam Parikh ]என்ற பேரில் ஒரு நூலாக எழுதியிருக்கிறார். சந்துலால் பாகுபாய் தலால் எழுதிய ‘ஹரிலால் காந்தி ஓர் வாழ்க்கைவரலாறு ‘ [Harilal Gandhi: A Life , Chandulal Bhagubhai Dalal.] அனைவராலும் குறிப்பிடப்படும் நூல்.
ஹரிலாலின் வாழ்க்கை ஒரு பெரும் துயரநாடகம். ஆனால் அது அபூர்வமானதும் அல்ல. இந்தியாவில் எவர் ஒருவர் தன் கொள்கையை முழுமையாகச் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு இந்தச் சோதனை கண்டிப்பாக வந்திருக்கிறது. பல காந்தியர்களின் வாழ்க்கையில் இதைக்காணலாம். கணிசமான ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் சொந்தவாழ்க்கையிலும் இந்த சிக்கலைக் காணலாம். இலட்சியவாதமும் குடும்பநலனும் முரண்படுபவை என்பதே எளிமையான விளக்கம். குடும்பநலன் என்பது சுயநலத்தையே சாரமாகக் கொண்டது.
எவர் பிள்ளைப்பாசத்தால் கொள்கைகளைச் சமரசம்செய்கிறார்களோ அவர்கள் காலப்போக்கில் அவர்களின் மொத்தக்கொள்கைகளையும் இழப்பதைக் காணலாம். அவர்களின் மகத்துவம் மிக்க வாழ்க்கையில் அந்தப் பாசம் தீராத களங்கமாக கடைசி வரை இருந்துகொண்டிருக்கும். இரு சிறந்த உதாரணங்கள் ஒன்று, நேருவுக்கு இந்திராகாந்தி. இன்னொன்று மொரார்ஜி தேசாய்க்கு காந்திபாய் தேசாய். தன் மகனுக்கு காந்தியின் பெயரை எத்தனை பேருவகையுடன் போட்டிருப்பார் மொரார்ஜி என்று சிந்திக்கும்போது கடைசியில் பேராசைகொண்ட மகன் மீதான பாசத்தால் மொராஜி பட்ட துன்பம் காந்தி பட்ட துன்பத்தைவிட அதிகம் என்று நான் எண்ணுவதுண்டு.
ஹரிலாலை எப்படிப் புரிந்துகொள்வது? தந்தை மகன் உறவென்பது எளிமையான ஒற்றைச் சமன்பாட்டில் நிற்பது அல்ல. தந்தையின் இயல்புகளின் வாரிசாகவும் தந்தையை நிராகரிப்பவனாகவும் மகன் வளர்கிறான். எந்த மகனிடத்திலும் உள்ளூர தந்தைநிராகரிப்பும் தந்தைவழிபாடும் விசித்திரமாகக் கலந்த நிலையில்தான் இருக்கும். அவற்றுக்கு இடையேயான சமன்பாடு என்பது பெரும்பாலும் வாழ்க்கைச்சூழல்களால் தன்னிச்சையாக உருவாவதே. அதை விதி என்றே சொல்லவேண்டும்.
காந்தியம் என்ற உயர்லட்சியவாதத்தைத் தாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனும் ஆன்மீகத்திறனும் கொண்டவரல்ல ஹரிலால். ஆனால் அவர் தன் தந்தை தனக்குமட்டும் தந்தையாக இருக்க வேண்டுமென விரும்பினார். தன் மகத்தான தந்தை தனக்கு அளித்ததை வாங்க திராணி இல்லாமல் தவித்தார். அந்த ஆங்காரமே அவரை காந்திக்கு எதிரியாக ஆக்கியது
தன் எதிரியின் வாசல்முற்றத்துக்குச் சென்று வயிற்றை அறுத்து ஹராகிரி செய்யும் ஜப்பானியனைப்போன்றது ஹரிலாலின் மரணம். தந்தையின் கண்முன் அவர் தன்னை அழித்துக்கொண்டார். அவர் முன் செத்துக்கிடக்க ஆசைப்பட்டார். ஹரிலால் ஒருபோதும் தந்தையை மறக்கவில்லை. உண்மையில் தந்தையை அன்றி எவரையுமே ஒரு பொருட்டாக நினைக்கவும் இல்லை. அவர் இல்லாமல் ஹரிலாலுக்கு வாழ்க்கை இல்லை. அவர் காந்தியின் கருநிழல். உரு மறைந்ததும் நிழலும் மறைந்தது.
ஹரிலாலுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. ஹரிலால் காந்தியின் மறுபக்கம். காந்திக்கு எதிராக தன்னை ஆக்கிக்கொண்டவர் என்பதனாலேயே காந்தி எவற்றையெல்லாம் தவிர்த்தாரோ அவற்றை எல்லாம் ஹரிலால் செய்தார். காந்தியிடம் ஒடுங்கியவை எல்லாமே ஹரிலாலில் பேருருவம் கொண்டு எழுந்தன. காமம், ஊதாரித்தனம், குடி, குரூரம்,மோசடித்தனம்! பிரமிப்பூட்டும் சமன்பாடு இது. காந்தியின் இடைவெளிகளில் சரியாகப் பொருந்தும் மறுபாதி என்று கூட ஹரிலாலைச் சொல்லலாம்.
காந்தி தன்னிடமிருந்து துரத்திவிட்ட அனைத்தும் ஹரிலாலாக மாறி அவர் முன் வந்து நின்று அவரைச் சவாலுக்கு அழைத்தன. ‘நீ மகாத்மா என்றால் என்னை வென்றுசெல்!’ எனறன. காந்தி தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஆகப்பெரிய சோதனையே ஹரிலால்தான். ஹரிலால் மீது அவர் பெரும்பாசம் கொண்டிருந்தார் என தேவதாஸ் காந்தி எழுதினார். ‘தனது அரிய நகை’ என ஓர் இடத்தில் காந்தி ஹரிலாலைச் சொல்லியிருக்கிறார். காந்தியின் ஆத்மாவில் இறங்கிய கட்டாரி போன்றவர் ஹரிலால். தன் கண்ணீரால் தவத்தால் அந்த காயத்த
மூத்த பனியா என்ன சொல்கிறார் என்பது ஒரு இளம் வணிகனுக்கு எப்போதும் முக்கியம்தான். காந்தி என்ற பனியா வணிகம்செய்யவில்லை, சமணத்துறவியும் ஆகவில்லை. மாறாக வக்கீல்தொழில் வழியாக அரசியலுக்கு வந்தார். ஆனாலும் அவரது செயல்களில் இரண்டாயிரம் வருடங்களாக இந்திய பனியாக்கள் சேர்த்த அனுபவ ஞானம் நுண்ணுணர்வுகளாகக் குடியிருந்தது. அதை அவரது எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் நாம் காணலாம்.

இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு நிறுவனம். ஒரு நிறுவனத்தை நடத்துவதென்பது இந்தியாவின் வேறெந்த சாதியைவிடவும் வெற்றிகரமாக பனியாவால்தான் சாத்தியம் என்பது அனுபவ உண்மை. காந்தி எப்படி இந்திய தேசிய காங்கிரஸை வழிநடத்தினார் என்பதில் எந்த ஒரு நிர்வாகியும் கற்றுக்கொள்ள வேண்டிய நூற்றுக்கணக்கான பாடங்கள் உள்ளன. அனைத்தையும் விவாதிப்பதென்பது நிர்வாகவியல் நிபுணர்களால் மட்டுமே இயலும். காந்தியவழியிலான நிர்வாகவியலை இன்று உலகின் பல பகுதிகளில் நிர்வாகவியல் கல்லூரிகள் பயில்கின்றன என்று கேள்விப்படுகிறேன்.

இது சார்ந்த பல நூல்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராம் பிரதாப் எழுதிய ‘காந்திய நிர்வாகவியல்’ [Gandhian Management Ram Pratap ] என்ற நூலை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அதன் நிர்வாகவியல் கலைச்சொற்களின் தடைகளைத் தாண்டி ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் காந்தியப்போராட்டத்தைக் கூர்ந்து கவனித்தாலே சில விதிகளை உணர முடியும்.

மூத்த பனியா இளம் வணிகனுக்கு என்ன சொல்லியிருப்பார்? சில ஆதார விதிகளை நான் ஊகிக்கிறேன்.

1. ஹரிலால்

மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஓர் இஸ்லாமிய நண்பரைச் சந்தித்த்தேன். மிதவாத நோக்கு கொண்டவர், அறிஞர் என்பது அவரைப்பற்றிய என் கணிப்பு. நான் எழுதும் காந்தியைப் பற்றிய கட்டுரைகளைப் பற்றி இயல்பாகப் பேச்சுவந்தது. அவர் ”காந்தியைப்பற்றி நாம தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அவர் வேற ஆளு. அந்த உண்மைகளை எல்லாம் மறைச்சிட்டாங்க…” என்றார்.
நான் ”என்ன உண்மைகள்?” என்றேன். அவர் ”காந்தியின் பிள்ளைங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவங்களைப்பத்தி யாருமே பேசறதில்லை. அவங்களிலே ஒருத்தர் பாகிஸ்தானுக்குப் போய் அங்கேதான் இருந்து இறந்தார். காந்தியைப்பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லியிருக்கார்” என்றார்.
நான் ”ஹரிலால் காந்தியைச் சொல்கிறீர்களா? அவர் முஸ்லீமாக மதம் மாறினாரே ஒழிய பாகிஸ்தானுக்குப் போகவில்லையே” என்றேன். ”இல்லை. இவர் இன்னொருத்தர். இவர் காந்தி பெண்களுடன் படுத்ததைப் பாத்துட்டு காந்தியை வெறுத்து பாகிஸ்தான் போய்ட்டார்” என்றார். எனக்கு அப்படி ஒரு தகவலே இல்லை. நான் உறுதியாக ”இல்லை. அவரது நான்கு மைந்தர்களைப் பற்றியும் என்னால் உறுதியாகவே பேசமுடியும்… ” என்றேன்
”உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…அரசாங்கம் பொய்சொல்றதைத்தான் நீங்களும் சொல்றீங்க. காந்தி அவரோட மகன்களை அவமானம் பண்ணி துரத்திவிட்டார். அவங்க அவரை வெறுத்தாங்க, நாட்டைவிட்டே ஓடிப்போனாங்க…” என்றார். நான் தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தேன். கல்யாணப்பந்தி. சாப்பிட்டபடியே நான் பேசிய கொஞ்சநேரத்தில் கண்டுகொண்டேன் நான் சொல்வதைக் கவனிக்கவே நண்பர் தயாராக இல்லை.
என் வழக்கமான குசும்புக்கு ஏற்ப வேண்டுமென்றே பிடிவாதமாகப் பேசினேன். நண்பர் கழிப்பறை நோக்கி பாய்ந்து செல்ல நானும் கூடவே சென்றேன். கழிப்பறை வாசலில் காத்து நின்று அவர் வெளியே வந்ததும் மீண்டும் பேச ஆரம்பித்தேன். நண்பர் தவியாய் தவித்தார். உள்ளூரச் சிரித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் அனுதாபம் தோன்றி விட்டுவிட்டேன். அவர் பாய்ந்து காணாமல் போனார்.
என் அனுபவத்தில் காந்தியைப்பற்றிய நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை அனேகமாகக் கண்டதே இல்லை — மனுஷ்யபுத்திரன் மட்டுமே ஒரு இடத்தில் காந்தியைப்பற்றிய சாதகமான ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய மதச்சூழலில் காந்தியைப் பற்றிய அவதூறுகள் ஒரு நூற்றாண்டுக்காலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைக் கேட்டே அவர்கள் வளர்கிறார்கள். அவற்றை மறுபரிசீலனை செய்யுமளவுக்கு வாசிப்பும் அவர்களிடம் இருப்பதில்லை.
ஆனால் அதைவிட முக்கியமான வினா அவதூறுகளை யார் சொன்னாலும் உடனடியாக நம்பும் மனநிலை அவர்களிடம் எப்படி உருவாகிறது என்பதுதான். ஆதாரங்கள் முன்வைக்கப்படும்போது அதைக் கேட்காமல் போகும் அந்தப் பொறுமையின்மை எப்படி வருகிறது? காந்தியை நிராகரிப்பதென்பது இந்தியாவின் சாரமான ஒரு பண்புநிலையை நிராகரிப்பது. அதைச்செய்யாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ இந்து அடிப்படைவாதத்தையோ தக்கவைத்துக்கொள்ள முடியாதென்பதே பதில். மதஅடிப்படைவாதம் பெரும்பாலும் எல்லா இஸ்லாமியர்களின் ஆழத்திலும் இருக்கும். கற்று, கனிந்துதான் சிலர் வெளியே வரமுடியும்.
இஸ்லாமிய மதத்தை தழுவிய ஆறே மாதத்தில் மலையாள எழுத்தாளர் கமலா சுரையா காந்தியை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். ‘தன் சொந்த பிள்ளைளை உயர்நிலைக்குக் கொண்டுவராத காந்தி என்ன ஒரு மகாத்மா?’ என்றார் அவர். காந்தி தன் பிள்ளைகளை அவமதித்தார், கொடுமைப்படுத்தினார், அவர்கள் அவரை நிராகரித்தார்கள் என்ற வழக்கமான பல்லவியைப் பாடினார். காந்தியை நிராகரித்து ஹரிலால் இஸ்லாமுக்கு மாறியதை துதித்தார். ‘சொந்த மக்களின் முன்னேற்றமே வாழ்க்கையின் சாரமாக கருதும் கெ.கருணாகரன் அல்லவா உண்மையான மகாத்மா’ என்று அதற்கு கல்பற்றா நாராயணன் கிண்டலாக பதில் சொல்லியிருந்தார்.

namachivaya

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95